திருவாரூர், மார்ச் 5 - 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பட்டியலில் காத்திருக்கும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். மினி மையத்திலிருந்து பிரதான மையங் களுக்கு பதவி உயர்வில் சென்ற ஊழி யர்களுக்கான இன்கிரிமென்ட் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலி யாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கான பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் வி.தவமணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியு றுத்தி அமைப்பின் மாவட்டச் செயலாளர் அ.பிரேமா, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட பொரு ளாளர் இரா.மாலதி, சுமை தூக்கும் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் கே.கஜேந்திரன் ஆகியோர் உரை யாற்றினர்.
தஞ்சாவூர்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில், சங்கத்தின் தலைவர் எம்.லட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட் டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கரூர்
சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பொன்.ஜெயராம், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என். சாந்தி, சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் எம்.சுப்ரமணியன், மாவட்ட பொருளா ளர் ப.சரவணன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் காலா ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் துவக்க உரை யாற்றினார். மாநில துணைத் தலைவர் மணிமேகலை கோரிக்கைகள் குறித்து பேசினார். மாவட்டச் செயலாளர் தமிழரசி, மாநில ஒருங்கிணைப்பாளர் மல்லிகா, வட்டச் செயலாளர் முத்துச்செல்வி, வட்டாரத் தலைவர் தனம், சிஐடியு மாவட்டத் தலைவர் ரங்கநாதன், மாவட்டப் பொருளாளர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் பழைய நகராட்சி அலுவல கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ராஜா மணி தலைமை வகித்தார். செயலர் த.சகுந்தலா, பொருளாளர் பி.ஜோதிலட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலை வர் சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.