கும்பகோணம், ஆக.29- விவசாயியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து சித்ரவதை செய்யும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே வாளபுரம் கிராமம் மேல பரட்டைத் தெருவை சேர்ந்தவர் ராஜ் குமார். இவர் அப்பகுதியில், அவ ருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரது பரம்பரையினர் வயல் பகுதியில், செல்லியம்மன் கோயி லைக் கட்டி வணங்கி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, அப்பகுதி ஊர் மக்க ளும் அவ்வப்போது கோயிலில் திரு விழா கொண்டாடி வந்தனர். இத்திரு விழா கோடைகாலத்தில் நடைபெறு வதால், வயல் சூழ்ந்த பகுதிகளில் வரப்பு வழியாக சுவாமி உற்சவ சிலையை வீதியுலா கொண்டு செல் வது வழக்கம். இந்நிலையில் கோயில் புனரமைக் கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதனால் அவ்வூரைச் சேர்ந்த சிலர், வலுக்கட்டாயமாக விவசாயி ராஜ்குமார் வயலில் பாதை அமைக்க இடம் கேட்டுள்ள னர். அதற்கு ராஜ்குமார், ‘பாதைக் கான இடத்திற்கு எனது வரப்பி லிருந்து ஒருபகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார். அதற்கு குறிப்பிட்ட சில நபர் ஆட்சேபம் தெரிவித்து, வயலின் நடுவே இடம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். இதை ராஜ்குமார் மறுக்கவே, ஊரைக் கூட்டி ராஜ்குமாரை ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ள னர். மேலும், அவரது வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு யாரும் செல்லக் கூடாது; அப்படி மீறி சென்றால் ரூ.10, 000 அபராதம் கொடுக்க வேண்டும்;
அங்குள்ள மளிகை. டீ கடைகளில் ராஜ்குமார் குடும்பத்திற்கு எந்த பொருளும் கொடுக்கக் கூடாது என தன்னிச்சையாக முடிவெடுத்து, அதன் படி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜ்குமார், நீதிமன்றத்தை அணுகி முறையிட்டு அதற்கான தடையாணையை (Stay Order) தற்போது பெற்றுள்ளார். இது குறித்து அறிந்து கோபமடைந்த சிலர், ராஜ்குமாருக்கு பல்வேறு வகையில் இடையூறு கொடுத்து வந்தனர். இந்நிலையில், தனது வயலில் இவ்வாண்டு சாகுபடிக்காக நிலத்தை தயார்படுத்தும் வேலைகளை செய்து வந்துள்ளார் ராஜ்குமார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சௌந்தரரா ஜன், சுந்தரமூர்த்தி, சுரேஷ் உள்ளிட்ட பலர் விவசாயி ராஜ்குமாரை தாக்கியும், அவரது மனைவியை காலை முதல் மதியம் வரை வெயி லில் நிற்க வைத்து வன்மமாக பேசி சித்ரவதைப் படுத்தியுள்ளனர். இதனால் ராஜ்குமார் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர், ராஜ்குமார் மற்றும் அவரது மனைவியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். வன்மமாக நடந்து கொள்ளும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி ராஜ்குமார் உயிருக்கும் அவரது குடும்பத்திற் கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதி காரிகள் தலையிட்டு, சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றியக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.