districts

img

ஆர்எஸ்எஸ்காரர்கள் இருவர் கைது ஷான் கொலையில் உயர்மட்ட சதி குறித்து விசாரணை

ஆலப்புழா, டிச.20- எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் ஷான் கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி மண்ணஞ்சேரியை சேர்ந்த கொச்சுகுட்டன், பிரசாத் ஆகி யோர் கைது செய்யப்பட்ட னர். அவர்கள், சதி மற்றும் கொலையில் ஈடுபட்டதாக ஏடிஜிபி விஜய்சாகர் கூறி னார். மொத்தம் பத்து பேர்  மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. மீதமுள்ள வர்களிடம் விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது. ரஞ்சித் சீனிவாசனின் படு கொலை எதிர்பாராதது. இந்த  கொலையில் உயர்மட்ட சதி குறித்து விசாரிக்கப்படும் என்று விஜய் சாகர் கூறினார். கொலைக் கும்பலையும் அவர்களுக்கான வாகனத் தையும் ஏற்பாடு செய்தவர்  பிரசாத் என காவல் கண்கா ணிப்பாளர் வி.ஜெய்தேவ் தெரிவித்தார். பாஜக தலை வர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என ஏடிஜிபி தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் கள் உள்ளிட்ட முக்கிய தக வல்கள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அனைத்துக் கட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ஆலப்புழாவில் நடந்த இரட்டை கொலையைத் தொ டர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (டிச.20) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு செவ்வாயன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் திங்க ளன்று பங்கேற்பதில் சிரமம்  இருப்பதாக பாஜக தலை வர்கள் தெரிவித்ததை யடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

;