கரூர், ஏப்.28 - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கரூர் வட்டக்குழு சார்பில் முப்பெரும் விழா வெங்கமேட்டில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கரூர் வட்டத் தலைவர் ச.ஜெய மணி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஜெரால்டு வரவேற்றார். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் அ.ரஹீம், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.மகா லட்சுமி ஆகியோர் பணி ஓய்வு பெற்றவர் களையும், இயக்க இதழ் புரவலர் நிதி வழங்கி யவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஜ.ஜெயராஜ், மாவட் டத் தலைவர் எம்.ஏ.ராஜா, மாவட்டப் பொரு ளாளர் அ.தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டாரப் பொருளாளர் த.பத்ம நாபன் நன்றி கூறினார்.