திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளியன்று சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. நன்னிலம் பேரூராட்சி தலைவர் பா.ராஜசேகர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி மேலாளர், பணியாளர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.