districts

திருச்சி விரைவு செய்திகள்

50 விழுக்காடு மானியத்தில் சோயா விதைகள் விநியோகம்

 பேராவூரணி, ஜன.4-  சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 விழுக்காடு மானியத்தில் சோயா விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.  சோயா விதைகள் 1972-ல் காவிரி பாசன பகுதியில் அறி முகப்படுத்தப்பட்டு 1990 முதல் வணிக ரீதியாக பயிரி டப்பட்டு வருகிறது. ‘இருபதாம் நூற்றாண்டின் தங்கப் பயறு’ என்று அழைக்கப்படும் சோயா, சுமார் 38 முதல்  40 விழுக்காடு வரை புரதச்சத்தும், 18 முதல் 20 விழுக்காடு வரை எண்ணெய்ச் சத்தும் கொண்டது.  சோயா தனி பயிராகவும், நெல் தரிசு பயிராகவும், கரும்பு, வாழை, மரவள்ளி, மஞ்சள், தென்னையில் ஊடு பயிராகவும் பயிர் செய்ய உகந்தது. ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், மாசிப் பட்டம், தைப்பட்டம் (நெல் தரிசு) போன்ற  பருவங்களில் சோயா சாகுபடி செய்யலாம்.  சோயா சாகுபடி விவசாயிகளுக்கு மிகவும் லாபகர மானதாகும். விவசாயிகள் விளைவிக்கும் சோயா விதை களை, சக்தி சுகர்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தினர் நல்ல விலைக்கு கொள்முதல் செய்து உடனுக்குடன் அதற்கான தொகையை வழங்குகின்றனர்.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் தரமான சான்று பெற்ற சோயா விதைகள் ஹெக்டேருக்கு 65 கிலோ மற்றும் டி.விரிடி 2.50 கிலோ ஆகியவை 50 விழுக்காடு மானி யத்தில் சேதுபாவாசத்திர வட்டாரத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயி கள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பயன்பெறலாம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜி.சாந்தி தெரி வித்துள்ளார்.


வள்ளியூரில் விபத்து:  கார் மோதி இளம்பெண்- சிறுமி பலி

திருநெல்வேலி, ஜன .4- நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவ நேரியை சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி கார்த்திகா ( 20).  புதன்கிழமை காலை கார்த்திகா தனது கணவர் சின்னராசுவின் அண்ணன் மகள் சாய் தனியா (5) என்பவருடன் மொபட்டில் வள்ளியூரில் இருந்து  கேசவநேரிக்கு சென்று கொண்டிருந்தார். வள்ளியூர் நான்கு வழிச்சா லையை கடக்கும்போது நாகர்கோவி லில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. திடீரென அந்த கார் கார்த்திகாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார்த்திகா, சாய் தனியா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.இதில் படுகாயம் அடைந்த கார்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சாய் தனியா படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டு சிகிச்சைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேதபரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவ மனை செல்லும் வழியிலேயே சிறுமி சாய் தனியா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த அமீர் என்பவர் மீது வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.


ஆண்டு பிரீமியம் செலுத்தியவருக்கு மக்கள் நீதிமன்ற உத்தரவால்  பணம் கிடைத்தது  

திருநெல்வேலி , ஜன. 4- நெல்லை மாவட்டம் இடையன்குடியைச் சேர்ந்த நவமணி ரோஸ்லின் என்பவர் நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் இடையன்குடி கனரா வங்கி இன்சூரன்ஸ் நிறுவன கிளை மேலாளர் தன்னை பாலிசி எடுக்குமாறு கூறினார்.  அப்போது 5 ஆண்டு முடிந்து விட்டால் மொத்த பாலிசித்தொகையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி பிரீமியம் கட்ட சொன்னார். 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்து 7 ஆயிரம் கட்டியுள்ளேன். பாலிசி முதிர்ச்சி பெற்று பணம் எடுக்க விண்ணப்பம் கொடுத்தபோது இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் பணம் வழங்காமல் அலைக்கழித்தனர்.  ஒரு வருடம் கழித்து வாருங்கள் என்றார்கள். ஒரு வருடம் கழித்து சென்றபோது 33 சதவீதம் பணம் தான் கொடுக்க முடியும் மீதிக்கு பாலிசி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் என்று கூறியுள்ளார்.  இந்த மனுவை நீதிபதி சமீனா விசாரித்து சம்பந்தப்பட்ட கிளை மேலாளருக்கு சம்மன் அனுப்பி னார். இதைத் தொடர்ந்து அந்த இன்சூரன்ஸ் நிறுவன வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 794-க்கு காசோலை வழங்கினார்.  அந்த காசோலையை நீதிபதி சமினா, நவமணி ரோஸ்லினிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவரு டைய வங்கி கணக்கில் இந்த பணம் வரவு வைக்கப் பட்டது.


சதுரகிரி கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

திருவில்லிபுத்தூர், ஜன.4- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் 7 ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் மட்டும் மலையேறி சாமி தரி சனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று  பரவி வரும்  நிலையில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவி லுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ,10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சீனாவில் இருந்து தமி ழகம் வந்த சில நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்  வத்திராயிருப்பு அருகே  இலந்தைகுளம் கிராமத்தில் தாய் மகள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.