தமிழ் பல்கலை.யுடன் பான் செக்கர்ஸ் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூர், அக்.14 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் (சமூக அறிவியல் துறை) மற்றும் தஞ்சை, விளார், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் முன்னிலையில், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்திரி இருவரும் கையெழுத்திட்ட ஒப்பந்த ஆவணங்களை பரி மாறிக் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி இரு நிறுவனங்களும் இணைந்து சான்றிதழ் படிப்புகள் மற்றும் கருத்தரங்குகள், பயில ரங்குகள் நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பேரா.ச.சங்கீதா, மா.அறி வானந்தன், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, இணைமுதல்வர், அ. அமர்கீதா, பேரா.த.அலமேலு, பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் மல்லிகா, உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
விபத்தில்லா தீபாவளி: விழிப்புணர்வு பேரணி
பொன்னமராவதி, அக்.14 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை ஆகியவை இணைந்து, ‘விபத்தில்லா தீபாவளி’, ‘உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்’ மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொன்ன மராவதி வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி காந்தி சிலையிலிருந்து பேரணி சென்றனர். இப்பேரணி, அண்ணா சாலை, பேருந்து நிலைய வளாகம் வழியாக நாட்டுக்கல் வரை சென்றது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு துண்டுப் பிரசுரத்தை வருவாய் துறையினர், தீயணைப்பு துறை யினர் வழங்கினர்.
உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, அக்.14 - இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன்குமார் பாரதி தாசன் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்பட அனைத்து கல்லூரி களிலும் தேர்வு கட்டணம் உள்பட, பிற கட்டணங்கள் இரண்டு மடங்கு களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காலக் கட்டத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள வேலையிழப்பு கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் மாணவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில், உயர்த்தப்பட்டுள்ள தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாவட்டக் குழு வலி யுறுத்துகிறது என தெரிவித்திருந்தார்.
உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா
மயிலாடுதுறை, அக்.14 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள் திருக்களாச் சேரி ஊராட்சி ஆயப்பாடி பள்ளிவாசலில் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் களில் பணியாற்றும் உலமாக்கள் பணியாளர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர் செ.முத்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 81 உலமாக்கள் பணியாளர் களுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.
ரூ.2.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 4 பேர் கைது
திருச்சிராப்பள்ளி, அக்.14- தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா போதை பொருட்களை வெளிமாவட்டத்தில் இருந்து லாரிகளில் கடத்தி வந்து, குமாரவயலூரில் உள்ள தனியார் குடோனில் வைத்து, பிக்அப் வாகனத்தில் ஏற்றி திருச்சி மாநகருக்குள் கடத்தி வருவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தெற்கு சரக காவல் துணை ஆணையர் மற்றும் தனிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2,50,000 லட்சம் மதிப் புள்ள சுமார் 300 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக ஒரு லாரியில் இருந்து பிக்கப் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் லாரி ஓட்டுநர் அப்பானந்தமூர்த்தி (31), பிக்கப் வாகன ஓட்டு நர் பெரியசாமி (23), செல்லபாண்டி (21), கிருஷ்ணமூர்த்தி (45) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.
உலக பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி
குடவாசல், அக்.14 - உலக பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் குட வாசல் அரசு எம்ஜிஆர் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி யில் இருந்து பேரணியாக சென்று விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி னர். நிகழ்ச்சிக்கு குடவாசல் வட்டாட்சியர் குருநாதன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை ஆகியத் துறை சார்பாக மழை-வெள்ள காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய விதிமுறை கள் மற்றும் அவசர காலத்தில் உதவிக்கு அழைக்கக் கூடிய மாநில, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு எண்கள் 1070-1077 மற்றும் கைபேசி செயலி, செல் எண்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டறிக்கை பொது மக்களிடம் வழங்கப்பட்டது. குடவாசல் அரசு எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி மாண வர்கள், கல்லூரியில் இருந்து குடவாசல் கடைவீதி மற்றும் பள்ளிவா சல் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். நிகழ்ச்சியில் குடவாசல் அரசு எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்திய சட்டங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள அறிவுறுத்தல்
கும்பகோணம், அக்.14- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கள்ளப்புளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரஞ்சிதா தலைமை வகித்தார். வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழங்கப்படும் சட்ட சேவைகள் பற்றிய கையேட்டை வழங்கினார். ஒன்றிய-மாநில அரசு களின் பயிற்சியுடன்கூடிய வேலை வாய்ப்பினை அளிக்கும் திட்டத்தில் மாணவர்கள் முழுமையாக பயன்பெற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டங்களைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சட்டக் கல்வி அறிவு மற்றும் விழிப் புணர்வு நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நீதிபதி ரஞ்சிதா அறிவுறுத்தினார்.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர், அக்.14- தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - அரியலூர் கோட்டம் சார்பாக அக்டோபர் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு ‘‘மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்’’ மேற்பார்வை பொறியாளர் தலைமையில், அரிய லூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, இக்கோட்ட மின்நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாள ரிடம் தெரிவித்து பயனடையலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.