தஞ்சாவூர், ஜூன் 8-
பேராவூரணியில், நெடுஞ்சாலை துறை சார்பில், 3000க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்ட மிடப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநில சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி, பேராவூரணி நெடுஞ்சாலை துறை சார்பில், மரக்கன்று நட்டு பராமரிக்கும் நிகழ்வு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் கே.சந்திரசேகரன் தலைமை வகித் தார். உதவிப் பொறியாளர் ஆர்.அருண்குமார் முன்னிலை வகித்தார்.சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
முதல் நாள் நிகழ்வாக, சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், கரம்பக்காடு பகுதியில் சாலையோரங்களில், நிழல்தரும் மரங்களாக வேம்பு, பங்கை, நாவல், மகிழம், இலுப்பை என சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு, மூங்கில் கூண்டு அமைத்து பராமரிக்கப்பட்டது.