திருச்சி, ஏப்.19- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருச்சி கிளை சார்பில் திங்களன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மஹாலில் தொடர் காத்திருப்பு போராட்டம் குறித்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை பொது செயலாளர் சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமதாஸ், சின்னச்சாமி, பொருளாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். மாவட்ட குழு உறுப்பி னர் ராமசாமி நன்றி கூறினார். கூட்டத்தில் 77 மாத டி.ஏ.வை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் பெண்களுக்கு மருத்து வப்படி ரூ.100 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை பல்ல வன் இல்லம் முன்பு நடைபெறும் காத்தி ருப்பு போராட்டத்தில் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட திருச்சி - கரூர் மண்டல ஓய்வூதியர்கள் ஏப்ரல் 28 - ஆம் தேதியும், விரைவு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதியும் கலந்து கொள்வது என முடிவு செய்யப் பட்டது.