districts

img

கல்மந்தை காலனி மக்களுக்கு வீடுகள் ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20 - திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு கல்மந்தை காலனியில் 25 ஆண்டுகளாக குடியிருந்து வந்த 128 பய னாளிகளுக்கும், ஆவணங் களின் அடிப்படையில் வீடு கள் ஒதுக்கிட வேண்டும். குடி யிருந்த மக்களிடம் ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை,  ஆதார் அட்டை அடிப்படை யில் விசாரணை நடத்தி வீடு வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் திங்க ளன்று கல்மந்தை காலனி பொதுமக்கள் திருச்சி பாலக் கரையில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வு மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மலைக் கோட்டை பகுதி செயலாளர் ராமர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர்.