districts

திருச்சியில் குற்றங்களை குறைக்க கூடுதலாக சிசிடிவி கேமராக்கள்

காவல்துறை ஆணையர் தகவல்

திருச்சிராப்பள்ளி, ஏப்.27-

   திருச்சி பெரியக்கடை வீதியில் உள்ள  சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் புதனன்று 1 கிலோ தங்க நகை 250 கிராம்  வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருடு  போன நிலையில், 4 மணி நேரத்தில்  திருச்சி மாநகர காவல் துறையினர் அதிரடி யாக திருடர்களை கண்டுபிடித்தனர்.  

  இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்  ஆணையர் சத்திய பிரியா கோட்டை காவல்  நிலையத்தில் வியாழனன்று செய்தியா ளர்களை சந்தித்தார்.  

  அப்போது அவர் கூறுகையில், ‘‘மாநக ரில் திருட்டு சம்பவங்களை குறைப்ப தற்காக அதிகப்படியான சிசிடிவி கேம ராக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். முக்கியமான இடங்களில் இரவு நேரங்க ளில் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

  45 திருட்டு வழக்குகள் பதிவாகி யுள்ளன. இதில், 38 வழக்குகளை முழுமை யாக கண்டுபிடித்து தீர்வு கொண்டு வந் துள்ளோம். சிறையில் இருந்து வெளியில் வருபவர்கள் குறித்து தொடர்ந்து தக வல்களை சேகரித்து அவர்களை மானிட் டரிங் செய்து வருகிறோம்’’ என்றார்.