districts

img

திருப்பூர் அரசுக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருப்பூர், பிப்.4- பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் சிக் கண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்து ரைத்த மாத ஊதியம் ரூ.57 ஆயிரத்து 700-ஐ  கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும். அரசாணை எண் 56ன்படி பணி நிரந் தரம் செய்ய வேண்டும். விரைந்து தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவிப்  பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் செவ்வாயன்று முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், தமிழ்நாட்டில் மொத்தம் 7364 கௌரவ விரிவு ரையாளர்கள் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற னர். திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம்,  காங்கேயம், உடுமலை அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் 250க்கும் மேற்பட் டோர் பணியாற்றுகின்றனர். சிக்கண்ணா கல் லூரியில் மட்டும் 36 பேர் பணியாற்றுகின்ற னர். இவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அதுவும் மாதம், மாதம் வழங்குவதில்லை. 3 மாதத் திற்கு ஒரு முறைதான் ஊதியம் வழங்கப்ப டுகிறது. 10 முதல் 15 ஆண்டுகள் வரை கூட  கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்று வோருக்கும் இதே ஊதியம் தான். பல்கலைக் கழக மானியக்குழு மாதம் ரூ.57 ஆயிரத்து 700  வழங்க பரிந்துரைத்துள்ளது. உயர் நீதிமன்ற மும் மானியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை  வழங்க கோரி உத்தரவிட்டுள்ளது. இருப்பி னும் அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி  வருகிறது. இஎஸ்ஐ, பிஎப், விபத்து காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த அடிப்படை உரி மையும் வழங்கப்படவில்லை. அத்துக்கூ லியை போல்தான் பணியாற்றுகிறோம். அர சாணை எண் 56ன் படி பணி நிரந்தரம் செய்ய  வேண்டும். விரைந்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம்  29ஆம் தேதி கோரிக்கை முழக்கப் ோராட்டம்  நடத்தினோம். அரசு எங்களுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே தான் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளோம். கோவை மண்டல உயர் கல்வி இயக்குநர் எங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றனர். ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத் தின் கிளைத் தலைவர் விமல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாணவர் சங்க மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் பிரவீன்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்டத் துணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட  மாணவர்கள் பங்கேற்றனர்.