திருச்சிராப்பள்ளி, ஏப்,4- திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே அகலப்பாதையில் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். திருச்சிராச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையில் டெமு ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ள தாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 37 கிலோமீட்டர் தூரம் கொண்ட திருத்து றைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி முதலில் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தது, தற்போது இது அகல ரயில்பாதையாக மாற்றப் பட்டுள்ளது.