திருச்சிராப்பள்ளி, ஜூலை 2-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமையில் மாநகரப் பகுதிகளில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் கடந்த 2 நாட்களாக நடைபெறுகிறது.
ஞாயிறன்று நடந்த சந்தா சேர்ப்பு இயக் கத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, ஜங்சன் பகுதி செயலாளர் ரபீக் ஆகியோர் அமைச்சர் கே.என்.நேருவிடம் சந்தா பெற்ற னர்.
சிபிஎம் மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்த தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, பகுதி செயலாளர் லெனின், கிளைச் செய லாளர் சின்னத்துரை, பகுதிக்குழு உறுப்பி னர் ரமேஷ் ஆகியோரும், சிஐடியு சுமைப்பணி சங்கம் சார்பில் கொட்டப்பட்டு சிமெண்ட் குடோன், பிரிட்டானியா பிஸ்கட் குடோன் பகுதியில் நடந்த இயக்கத்தில், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
திருச்சி புறநகர் பகுதியில் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தலைமை யில் சந்தா சேர்ப்பு இயக்கம் நடந்தது. முசிறி ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் டி.பி. நல்லுசாமி தலைமையில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் பழநிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முசிறி கடைவீதி, துறையூர் பைபாஸ் ரோடு, தா.பேட்டை சாலை, கைகாட்டி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.