districts

img

பட்டுப் புடவை மூலப் பொருள்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும்

கும்பகோணம், ஜூன் 23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்  அருகே திருவிடைமருதூர் தாலுகா வில் உள்ள திருபுவனத்தில், அகில  இந்திய அளவில், கைத்தறி பட்டுச்சேலை  விற்பனையில் முதன்மை நிறுவனமாக திகழும் திருபுவனம் பட்டு கைத்தறி நெச வாளர்கள் கூட்டுறவு சங்கம் (திகோ சில்க்ஸ்) பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு அங்கத்தினர்கள் பேரவை நடை பெற்றது. திகோ சில்க்ஸ் பாதுகாப்பு ஒருங்கி ணைப்பு குழு பொறுப்பாளர் நாகேந்தி ரன், தலைமையில் பேரவை நடை பெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும்  அங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.  பேரவையில் தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இயங்கும் புகழ்பெற்ற பட்டு கைத்தறி,  பட்டு கூட்டுறவு சங்கத்தில் (திகோ  சிலக்ஸில்) ஆண்டிற்கு ரூ.200 கோடிக்கு  மேல் வரவு-செலவு நடைபெறுகிறது. ஆனால் அந்நிறுவனத்தை நிர்வகிக்க கைத்தறி துறையைச் சார்ந்த அரசு அதிகாரியான மேலாண்மை இயக்குநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே உடனடியாக மேலாண்மை இயக்குநரை நியமனம் செய்ய வேண்டும். திருபுவனம் பட்டு கைத்தறி கூட்டு றவு சங்க அங்கத்தினர்களால் நெய்யப் பட்ட பட்டுப் புடவைகள் 100 கோடிக்கு மேல் தேக்கமடைந்துள்ளன. நிபந்த னையின்றி விற்பனையை அதிகப்படுத்த  வேண்டும். பட்டுப் புடவைகள் தயார் செய்வதற்கான மூலப் பொருள்களான பட்டிற்கு 25 சதவீதம், ஜரிகைக்கு 5 சத வீதமும் தமிழக அரசு மானியம் வழங்கிட வேண்டும்.  மற்றொரு அரசு நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் மூலம் பட்டுப் புடவை கொள்முதலை அதிகப்படுத்தியும், ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கியும் கைத்தறி ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்த வேண்டும்.  அங்கத்தினர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஐசிஐசிஐ லம்பார்டு திட்டத்தின்படி உள்நோயாளி களுக்கு ரூ.7,500, வெளி நோயாளி களுக்கு ரூ.7,500 வழங்கி, மருத்துவக் காப்பீடு திட்ட தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மற்றும் ஜவுளித்துறை அமைச் சர், தனி கவனம் செலுத்தி அங்கத்தின ரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நட வடிக்கை எடுக்க வேண்டுமென தெரி வித்தனர்.