districts

img

திருவிளையாட்டம் ஊராட்சியை கண்டித்து வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்

மயிலாடுதுறை, நவ.16 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருவிளை யாட்டம் ஊராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள கோவில்பத்து, காளியம்மன் கோவில்தெரு, ஆலக்கரை பகுதிகளை இணைக் கும்  சாலையை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள், பேருந்து பயணி கள், வர்த்தகர்கள் பயன்பாட்டிற் காக அமைக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கும் பொதுக் கழிப்பறையை சீர மைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மன்மதன்கோவில் தெரு செல்லும் சாலையில் மாண வர்கள், பேருந்துக்காக காத்திருப்ப வர்கள், வர்த்தக வியாபாரிகளுக்கு மிகவும் பயன்பட்டு வந்த குடிநீர் டேங்கை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும். பொது மயானத்திற்காக அரசு வழங்கியுள்ள ரூ.10 லட்சம் பரிசு தொகையை மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நேர்மையாக செல விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது. திருவிளையாட்டம் கடைவீதி யில் நடந்த போராட்டத்திற்கு கிளைத் தலைவர் என்.அறிவரசன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஏ.அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன், ஒன்றியச் செய லாளர் பவுல் சத்தியராஜ், ஒன்றிய தலைவர் கார்த்திகேசன், ஒன்றிய பொருளாளர் ராமச்சந்திரன் ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக காளியம்மன் கோவில் செல்லும் சாலை அருகி லிருந்து இறப்புக்கு வாசிக்கும் இசையை வாசித்து, குண்டும், குழியு மான சாலையில் நாள்தோறும் விபத்துக்குள்ளாவதை பிரதி பலிக்கும் விதமாக 3 இளைஞர்கள்  தலை, கை, கால்களில் காய மடைந்து கட்டுப் போட்டது போன்று வேடம் அணிந்திருந்தனர். மேலும், அவர்கள் பொதுமக்களுடன் கோரிக்கைகளை முழங்கி பேரணி யாக புறப்பட்டு மெயின்ரோடு வழியாக வந்து திருவிளையாட்டம் கடைவீதியில் போராட்டத்தில் ஈடு பட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது போராட்டம் நடைபெற்றது.  வாலிபர் சங்கத்தின் போராட் டத்தை வாழ்த்தி மாதர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் ஜி. வெண்ணிலா உரையாற்றினார்.