districts

img

இடிந்து விழும் நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்

அறந்தாங்கி, மார்ச் 11- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி தட்டான்வயல் கிரா மத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு  முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 300-க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரு கின்றனர். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் முற்றி லும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானா லும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சுற்றுச்சுவர்களில் பெரிய அளவில்  ஓட்டை இருப்பதால் ஆடு, நாய் போன்ற கால்நடைகள் பள்ளியின் உள்ளே வந்துவிடு கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அச்ச மடைகின்றனர். எனவே மாணவர்களின் நலன்  கருதி சேதமடைந்த சுற்றுச்சுவரை இடித்து விட்டு, புதிய சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.