மார்த்தாண்டம் நவ. 2- மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மழை நீர் அருவி போல் கொட்டியதில் சொகுசு காரின் கண்ணாடி உடைந்தது. குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலத்தை தொட்டு வெட்டுவெந்நி, மார்த்தாண் டம் ஜங்ஷன் வழியாக பம்மத்திற்கு மேம்பா லம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் மழை நீர் பாய்வதற்காக இருபுறங்களிலும் பிவிசி பைப் பொருத்தப்பட்டுள்ளது ஆனால் இந்த பைப்பு கள் பெரும்பான்மையானவை இழகி பரிதாப நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங் களில் அருவி போல் கொட்டுவது வாடிக்கை யாக நடைபெறும் இதில் பைக்கில் செல்ப வர்கள் குழித்துவிட்டு செல்வதும் உண்டு. இந்த நிலையில் மார்த்தாண்டம், குழித் துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் மழை கொட்டி தீர்த்தது சமீப காலத்தில் இதைப்போல் மழை பெய்ய வில்லை என்றே கூறலாம். இந்த மழையால் ரோடுகளில் வெள்ளம் ஆறு போல் ஓடியது மேம்பாலத்திலிருந்து மழை நீர் அருவு போல் ஆர்ப்பரித்து கொட்டியது மார்த்தாண்டம் தட்டாக்குடி இறக்கத்தில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. உடைந்த பிவிசி பைப் வழியாக மேம்பாலத்திலிருந்து மழை நீர் கொட்டி இந்த காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது மேலும் இந்த மழை நீர் காருக்குள் புகுந்து சேதமடைந்தது்.