districts

நிலத்தை எழுதி தர மறுத்தவரை மிரட்டிய பாஜக நிர்வாகி

ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

கும்பகோணம், ஏப்.29-

    தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளராக உள்ள இவர் மீது,  2016-இல் மருதா நல்லூர் மதன் சக்கர வர்த்தி கொலை, 2017-இல் தாராசுரம் சிவா னந்தம் கொலை, 2022-இல் 2 கொலை முயற்சி  உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் நாச்சியார்  கோவில் மற்றும் கும்பகோணம் தாலுகா காவல் நிலையங்களில் ரவுடி பெயர் பட்டிய லில் உள்ளார்.

  இந்நிலையில், கருப்பூரைச் சேர்ந்த சிவக் குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை  ஏக்கர் நிலம், கார்த்திகேயன் வீட்டிற்கு பின்புறம் உள்ளது. 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனக்கு இலவசமாக எழுதி தர வேண்டும் என சிவகுமாரை மிரட்டிய தாக கூறப்படுகிறது.

   இது தொடர்பாக சிவக்குமார், கடந்த 26- ஆம் தேதி நாச்சியார் கோவில் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவிடைமருதூர் காவல்துறையினர் கார்த்திகேயன் வீட்டுக்கு சென்றனர்.

   ஆனால், கார்த்திகேயன் காவல்துறை யினரை கண்டு தப்பியோடினர். இதனை யடுத்து காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், அவரது வீட்டில் வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வீடியோ கேமராவின் பதிவு களை பார்க்க பயன்படும் டி.வி.ஆர்  கண்ட்ரோல் யூனிட் மற்றும் கார் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.