districts

img

கைஃபா அமைப்பினருக்கு பசுமை முதன்மையாளர் விருது: ஆட்சியர் வழங்கினார்

தஞ்சாவூர், ஆக.16 - தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப்  பகுதியான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில், கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய  கஜா புயலின் போது, மின் கம்பங்கள் சாய்ந்து,  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் ஏரி,  குளங்களை முறையாக தூர் வாராததால் நிலத்தடி நீர்மட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அப்போது, நீரின் தேவையை உணர்ந்த  பேராவூரணி பகுதியை சேர்ந்த இளை ஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, கடை மடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைஃபா) என்ற அமைப்பை, கடந்த  2019 ஆம் ஆண்டு துவக்கினர். முதற்கட்ட மாக பலரிடம் நிதி திரட்டி, சுமார் 600 ஏக்கர்  பரப்பளவு கொண்ட பேராவூரணி பெரிய குளம் ஏரியை தூர்வாரி சீரமைத்து, குறுங்காடுகள் அமைத்தனர். இதனால் அப்போது பெய்த மழையால் ஏரியில் தண்ணீர்  தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.   இதையடுத்து, கைஃபா அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் தமிழ்நாடு முழு வதும் தூர்வாரும் பணியை மேற்கொண் டனர். இதுவரை 211 ஏரி, குளங்களை தூர்வாரி சீரமைத்து உள்ளனர். இந்த அமைப்பில் சுமார் 450 உறுப்பினர்களும், 75 வாழ்நாள் உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களின் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு துறையில் முன்மாதிரியான பங்களிப்பான பசுமை முதன்மையாளர் விருதை அறிவித்தது. இந்நிலையில், வியாழக் கிழமை தஞ்சாவூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்க ஜம், “பசுமை முதன்மையாளர்” விருதுக்கான சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம்  ரூபாய்க்கான காசோலையை கைஃபா நிர்வாகிகளிடம் வழங்கினார்.  இந்த விருதினை கைஃபா அமைப்பின் தலைவர் கார்த்திக் வேலுச்சாமி, செயலாளர்  பிரபாகரன், நிறுவனர் நவீன் ஆனந்த், பொரு ளாளர் தங்க.கண்ணன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.