திருவாரூர், பிப்.8- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளை யாட்டுப்பிரிவு சார்பில் முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இதில், 12 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கபடி (மாணவர்கள் மட்டும்), கூடைப்பந்து. வளைகோல்பந்து மற்றும் மேசைப்பந்து (மாணவ, மாணவி யர்கள்) ஆகிய விளையாட்டுப்போட்டி களை புதனன்று (பிப்.8) அன்ற மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முத லமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழனன்று (பிப்.9) தொடங்கி அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவ னப்பிரியா செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயசந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.