திண்டுக்கல், ஏப்.19- 350 தொகுதிகளுக்கு மேல் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று திண்டுக் கல்லில் ஐ.பெரியசாமி செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். திண்டுக்கல் ராமநாதபுரத்தில் உள்ள வாசவி மெட்ரிக் பள்ளியில் 124- ஆவது வாக்குச்சாவடியில் வெள்ளி யன்று காலை வாக்களித்துவிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ‘‘தமிழகத்தில் 40 தொகுதிகளி லும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். இந்தியா முழுவதும் சுமார் 350 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். பாரதிய ஜனதா கட்சி 150 தொகு திக்கு கீழ்தான் வெற்றி பெறும். பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி கொடுங்கோல் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக செய்து வந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு முடிவு வரும்’’ என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘‘திண் டுக்கல் தொகுதியில் ஆர்.சச்சிதா னந்தம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் அமோக வெற்றி பெறுவார். கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகளுக்கு மேல் அதிகமாக பெற்று வெற்றி பெறு வார்’’ என்று ஐ.பெரியசாமி தெரிவித் தார்.