தஞ்சாவூர், ஜூன் 8-
தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல் மணிகள், தமிழக அர சின் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத் தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் கொள்முதல் செய் யப்பட்டு, லாரிகள் மூலம் உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படு கின்றன.
இருப்பினும், அவ்வப்போது நெல் கொள்முதல் செய்வதிலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதிலும் தாமதமாவதுடன், இயற்கை இடர்பாடுகளால் நெல்மணிகள் சேதமடை வதும் தொடர்கிறது.
இந்தப் பிரச்சனைகளைக் களையும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 கிராமங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நுகர்பொருள் வாணி பக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தஞ்சா வூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டம் கோபு ராஜபுரம், கீழக்கொருக்கப்பட்டு, கும்ப கோணம் வட்டம் குமரன்குடி, உத்தம தாணி, தஞ்சாவூர், ஒரத்தநாடு என 20 இடங்களில், தலா ரூ.62.50 லட்சம் வீதம் ரூ. 12.50 கோடியில் கொள்முதல் நிலையங்கள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு நிலையத்திலும் 400 டன் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்க லாம். இந்தப் பணிகளை 6 மாதங்களில் முடித்து, சம்பா பருவத்தில் விவசாயிகளிட மிருந்து நெல் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
சேமிப்புக் கிடங்குகள்
நெல் மூட்டைகளை திறந்தவெளியில் வைத்து பாதுகாப்பதில், இயற்கை இடர் பாடுகளின் போது மழையில் நனைந்து நெல்மூட்டைகள் சேதமடைவதை தவிர்க் கும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கான்கிரீட் தளம் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப் பிடத்தக்கது.