ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரிய-ஆசிரியைகள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். அன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் நிலை, இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் நிலை மற்றும் மாணவ-மாணவியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாடகம் மூலம் நடித்து காட்டினர். பள்ளி முதல்வர் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார்.