districts

img

புத்தகங்களோடு புத்தாண்டை கொண்டாடிய தமுஎகச

சங்கரன்கோவில். ஜன.1 சங்கரன்கோவிலில் புத்த கங்களோடு புத்தாண்டு கொண்டாடிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் கைகளில் மெழுகுவர்த்தி யும், புத்தகங்கள் ஏந்தியும் புதிய ஆண்டை வரவேற்ற னர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தி னர் “புத்தகங்களோடு புத் தாண்டு கொண்டாட்டம்” நிகழ்ச்சியை நடத்தினர். பொதிகை புத்தகத் திரு விழா நடைபெற்று வரும் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் எழுத் தாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் புத்தக வடிவில் நின்று ஒரு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மற்றொரு கையில் புத்தகம் ஏந்தியும் நின்ற னர். பின்னர் “வாசிப்போம் வாசிப்போம் புத்தகத்தை வாசிப்போம் “நேசிப்போம் நேசிப்போம் புத்தகத்தை நேசிப்போம்” என கோஷங் கள் எழுப்பி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற னர். இந்நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சங்கரன் கோவில் எம்எல்ஏ ராஜா சார்பில் புத்தகங்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத் தினர் செய்திருந்தனர்.