districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சாவூர் மாவட்ட மாநாடு

தஞ்சாவூர், அக்.21 -  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சாவூர் மாவட்ட 15 ஆவது மாநாடு, தஞ்சாவூரில் மாவட்டத் தலைவர் பா.முருகன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீ மகேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஆ. தமிழ்வாணன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ஆ.பெரியசாமி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி வேலை அறிக்கை, மாவட்டப் பொருளாளர் கு.பாஸ்கரன் வரவு -செலவு அறிக்கை, மாவட்ட மகளிர் அணி துணை குழு அமைப்பாளர் ஏ.ஆர். கவிதா மகளிர் துணைக்குழு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன், ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் இர. கலியமூர்த்தி உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினர். பணி ஓய்வு பெற்ற வட்ட நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி பாராட்டிப் பேசினார். மாநிலச் செயலாளர் ச.ஹேமலதா நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் ஆ.செந்தில்குமார் நன்றி கூறினார். மாநாட்டில் மாவட்டத் தலைவராக ஆ.செந்தில்குமார், செயலாளராக ஏ.ரெங்கசாமி, பொருளாளராக ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர்களாக கவிதா, தமிழ்வாணன்,  பார்த்தசாரதி, தேசிங்குராஜன், இணைச் செயலாளர்களாக ஜெயக்குமார், வெங்கடேசன், ஹேமலதா, ரமேஷ் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.  தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணி யிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.