திருவாரூர், ஜூன் 24-
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குளிக்கரை பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளா கத்தில் கட்டப்பட்டு வரும் மருத்துவ அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்டடத்தின் கட்டுமான பணிகள், அம்மையப்பன் பகுதியிலுள்ள துணை சுகாதார நிலையம், கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியில் சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ள இடம், கால்நடை மருத்துவமனை வளா கத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம், அபிவிருத்தீஸ்வரம், செல்லூர் பகுதிகளில் சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ள இடம், குடவாசல் பகுதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப் பறை கட்டடம் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான இடம், வடகண்டம் பகுதியில் அமையவுள்ள சுகாதார நிலையத்திற்கான இடம், அகரதிருநல்லூர் பகுதியில் அங்கன்வாடி மையம் மேம்படுத்தப்பட வுள்ள இடம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.