districts

img

குரூப்-4 தேர்வுக்கான கையேடுகள் வழங்கல்

அரியலூர், மார்ச் 16 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப்-4  தேர்வுக்கான கையேடுகள் வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி.சிவசங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் பயிற்சி பெற்று  வரும் 65 பேருக்கு, 65 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 தேர்வுக்கான கையேடுகளை யும், பாடப் புத்தகங்களையும் வழங்கி,  தேர்வில் வெற்றி பெற வாழ்த்தினார். தொடர்ந்து அவர், 64 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.61.44 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட  ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா  முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், இள நிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத், நகர்மன்றத் தலைவர் சாந்தி  கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.