தஞ்சாவூர், ஜூன் 5-
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் திருவள்ளுவர் கல்விக் கழகத்திற்கு மாணவர்கள் பயன் பாட்டிற்கான கணினி வழங்கப்பட்டது.
திருவள்ளுவர் கல்வி கழகம் மூலம், ஏழை, எளிய மாணவர்க ளின் அரசுப் பணி கனவை நனவாக் கும் வகையில், போட்டி தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் சூர்யேந்தி ரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சி மையத்திற்கு வந்து, செயல்பாடுகளை கேட்டறிந்து, மாணவர்களிடம் உரையாடினார்.
இதன் தொடர்ச்சியாக, பயிற்சி மையத்தில் தொடர்ந்து நடத்தப் படும் தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரித்தல் மற்றும் மையத்தின் தேவைகளுக்காக பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பாக கணினி வழங்கப்பட்டது. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் சூரியேந்திரன், திரு வள்ளுவர் கல்விக் கழக நிர்வாகி நா.வெங்கடேசன், த.பழனிவேல், பேராசிரியர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் வழங்கினார்.