districts

img

கோவில்பட்டியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் துவங்கியது

தூத்துக்குடி,ஏப்.21-  கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 14 நாள் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் துவங்கியது. இதனை  இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டு கழ கத்தின் சார்பாக கோடைகால ஹாக்கி பயிற்சி  முகாம் வ.உ.சி மேல்நிலைப்பள்ளி மைதானத் தில் 14 நாள்கள் நடைபெறுகிறது. இந்த  பயிற்சி முகாம் தொடக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய ஹாக்கி அணி வீரர்  மாரீஸ்வரன் கலந்து கொண்டு பயிற்சி முகா மினை தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அவர் ஹாக்கி விளையாட்டு நுணுக்கங்கள் குறித்து எடுத்து ரைத்தார். மே 3 ஆம் தேதி வரை நடைபெற  உள்ள இந்த பயிற்சி முகாமில் முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் முகமது ரியாஸ், அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர் களுக்கு தினமும் காலையும் மாலையும் பால், முட்டை வாழைப்பழம், முளைத்த பயிர்  ஆகியவை வழங்கப்படும்  தோல்வியில் இருந்து மீள்வது எப்படி என்பதை பற்றி வீரர்களுக்கு மனநல நிபுணர்  பாலாஜி தலைமையில் வகுப்பு நடைபெற வுள்ளது. பயிற்சியாளர்களாக மகேஷ் குமார், பிரேம்குமார், விபின் காந்த், கௌத மன் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். இறுதி  நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட  அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப் படவுள்ளது பயிற்சி முகாம் துவக்க விழாவில் ஹாக்கி  யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முகபாரதி, பொருளாளர் காளி முத்துபாண்டிராஜா, ராஜீவ் காந்தி விளை யாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முரு கன், மூத்த வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் குமார், மோகன், காளிதாஸ், தனசேகரன், மாசாணம்  மாயாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.