தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் செவ்வாயன்று (பிப்.1) மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்துள்ளது, உடல்வெப்பநிலை ஆகியவை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.