districts

img

கடற்கரை கைப்பந்து போட்டி

மயிலாடுதுறை, அக்.20 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், முதலமைச்சர் கோப்பைக்கான பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) போட்டியில் மாநில அளவில் இரண்டு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்று ரயில் மூலம் ஊர் திரும்பிய மாண வர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, அவர்கள் சாரட் வண்டியில் சீர்காழியின் முக்கிய வீதிகளின் வழி யாக ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டப்பட்ட னர். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச் வாலிபால் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவி கள் பீச் வாலிபால் போட்டியில், பெண்கள் பிரிவில் நித்திஷ்வரி, சுந்தரநாயகி, ஆண்கள் பிரிவில் ஹரிஷ்,  பிரதிப்குமார் ஆகிய மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். சஞ்சய், விஷ்வா என்ற மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.  பதக்கம் வென்று ரயில் மூலம் சீர்காழி திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், பள்ளியின் தாளாளர் ஆதித்யா ராஜ்கமல், ரோட்டரி சங்க தலைவர் கணேஷ், மயிலாடுதுறை மாவட்ட வாலி பால் சங்க செயலாளர் பாபு, பொருளாளர் சேரன், உடற்கல்வி இயக்குநர்கள் முரளிதரன், செல்லதுரை மற்றும் பல்வேறு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ்  மற்றும் நித்யா ஆகியோரையும், கல்வி நிறுவனங்களின்  இயக்குனர் அமுதா நடராஜன், நிர்வாக அதிகாரி சீனி வாசன், முதல்வர் ராமலிங்கம், துணை முதல்வர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.