கும்பகோணம், ஆக.26 - கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை உட னடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. அதனொரு பகுதியாக, கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கடைவீதியில் கிளை துணைத் தலைவர் ஐயப்பன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் தருண் துவக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராகுல் கண்டன உரையாற்றினார். கிளைச் செயலாளர் மகா ராஜா நன்றி கூறினார். கிளை நிர்வாகிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.