districts

img

தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.29 - தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திரு.வி.க கல்லூரி மாணவர்கள் பிரச்சாரத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின்  நடவடிக்கைகளை கண்டித்தும், மாணவர்க ளின் கோரிக்கைகளை வென்றிட, தேசத்தை,  கல்வியை, ஜனநாயகத்தை, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்திட வலி யுறுத்தியும், இந்திய மாணவர் சங்கம் தலை மையில் தென்னிந்தியா முழுவதும் 16 மாண வர் அமைப்புகள் மற்றும் தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO) சார்பாக  பிப்ரவரி 1 அன்று சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் மாணவர் பேரணி  நடைபெற உள்ளது. இதை விளக்கி, திருவாரூர் மாவட்டம் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரி முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வீ.சந்தோஷ் தலைமை வகித்தார். மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் விளக்க உரையாற் றினார். மாவட்டத் தலைவர் ப.சுர்ஜித், மாவட்ட துணைத் தலைவர் லிவிஷ்ட்டியா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.