புதுக்கோட்டை, ஜூலை 3-
தடை செய்யப்பட்டுள்ள எலிக்கொல்லி விஷம் கடைகளில் விற்பனை செய்யப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும், “புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலிவிஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை விற் பனை உரிமம் பெறாமல், விற்பனை செய்யப்படுவது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி குற்றமாகும். வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைக் கடை களில் விற்பதற்கு உரிமம் பெறுவது அவசியமாகும்.
பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி உரிய பதி வேடுகளையும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்குரிய பட்டியலையும் வழங்க வேண்டும். பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் தமிழக அரசால் முற்றி லும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனையா ளர்கள் விற்பனை செய்யக்கூடாது. ஆய்வின் போது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.