districts

img

மொழியின் ஆவணக் காப்பகமாக நூலகம் திகழ்கிறது

புதுக்கோட்டை, அக்.10- மொழியின் ஆவணக் காப்பகங் களாக நூலகங்கள் திகழ்கின்றன என்றார் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா.  புதுக்கோட்டையில் செவ்வாயன்று நடைபெற்ற ஞானாலாய ஆவணப்பட திரையிடல் விழாவில் அவர் பேசிய தாவது: தற்போது இஸ்ரேலுக்கும் பாலஸ் தீனத்திற்கும் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதர்கள் உலகின்  பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த னர். எந்த நாடுகளில் அவர்கள் வாழ்கின் றனரோ அந்த நாட்டு மொழியைக் கற்றுக்கொண்டு வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்களின் தாய் மொழியான ஹீப்ரூ மொழி முற்றாக அழிந்துவிடும் நிலை வந்தபோது, அவர்கள் விழித்துக் கொண்டனர். எங்கெங்கெல்லாம் யூதர்கள் வசிக் கின்றனரோ அங்கெல்லாம் அவர் களுக்கு சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு ஹீப்ரூ மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. மிக விரைவில் அவர்கள் தாய்மொழியைக் கற்றுக் கொண்டதோடு, தனக்கென ஒரு  நாட்டையும் உருவாக்கிக் கொண்டார் கள்.  இது ஒரு மொழி மீண்டும் உயிர்பெற்றதால் ஏற்பட்ட மாற்றம். அமெரிக்காவில் ஆங்கிலேயர்கள் குடியேறிய பிறகு, அங்கு வாழ்ந்த  செவ்விந்தியர்கள் அடிமையாக்கப் பட்டனர். அவர்கள் பேசிய தாய்மொழி யும் அழிக்கப்பட்டது. இப்படி பல்வேறு  நாடுகளில் தாய்மொழி அழிக்கப்பட்ட தால், அந்த இனமே அழிந்துவிட்டது. ஒரு இனத்தின், பண்பாட்டின் ஆணி வேராக மொழி இருக்கிறது.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார் வள்ளுவர். இடை யில் எப்படி இவ்வளவு சாதி வந்தது  என்பதை வீரமாமுனிவர் ஆய்வு செய்த  பிறகுதான், திராவிட மொழிக் குடும்பம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவி இருந்தது தெரிய வந்தது. இதை சங்க இலக்கியம் ஆவணப்படுத்தியுள்ளது. வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள இலக்கியம் தேவைப்படு கிறது. அந்த இலக்கியத்தை மொழி தான் பாதுகாக்கிறது. அந்த மொழியின்  ஆவணக் காப்பகங்களாக நூலகங்கள்  உள்ளன.  உலகில் அறிவுக் களஞ்சியமாக  எத்தனையோ நூலகங்கள் இருக் கின்றன. அந்த வரிசையில் புதுக்கோட் டையில் பா.கிருஷ்ணமூர்த்தி-டோரதி  தம்பதியால் நிறுவி பாதுகாக்கப்பட்டு உள்ள ஞானாலாய நூலகமும் மிகுந்த  முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத் தில் வேறு எங்கும் கிடைக்காத நூல் களின் முதல் பதிப்பு இந்நூலகத்தில் உள்ளது தனிச் சிறப்பாகும். நமது பண்பாடு, மொழி, இலக்கியத்தை தாங்கி நிற்கின்ற காலப் பெட்டகமாக இந்த நூலகம் உள்ளது. எனது வகுப்பாசிரியர் பா.கிருஷ்ண மூர்த்தியும், அவரது துணைவியார் டோரதியும் இணைந்து வளர்த்து வந்துள்ள நூலகத்தைப் பற்றி இயக்குநர் அம்ஷன் குமார் ஆவணப்படமாக எடுத்துள்ளார். மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாம் பரந்த அளவில் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவிற்கு மருத்துவர் எஸ்.ராம் தாஸ் தலைமை வகித்தார். இயக்குநர்  அம்ஷன்குமார், மேனாள் துணை வேந்தர் சொ.சுப்பையா, கவிஞர் தங்கம் மூர்த்தி, மருத்துவர் ஜெயராமன், சந்திரா ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். ஞானாலயா நூலக நிறுவனர் பா. கிருஷ்ணமூர்த்தி ஏற்புரை வழங்கினார்.