கும்பகோணம், அக்.2 - அரசு போக்குவரத்துக் கழ கம் கும்பகோணம் சார்பில் பிர சித்தி பெற்ற ஆறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகை யில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 2024 அக்டோபர் 3 ஆவது வாரம் முதல் இயக்கப்படுகிறது. விரைவில் துவங்கப்பட வுள்ள இச்சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம் தொ டர்பாக அறநிலையத் துறை மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்களுக்கு இடையே யான ஆலோசனை கூட்டம் கும்பகோணம் அரசு போக்கு வரத்துக் கழக தலைமைய கத்தில் நிர்வாக இயக்குநர் இரா. பொன்முடி தலைமையில் நடை பெற்றது. ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக இயக்குநர் பேசியதாவது: பயணிகள் மற்றும் பக்தர்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, ஆறு முரு கன் கோயில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட இச்சிறப்பு பேருந்து விரைவில் இயக்கப் படவுள்ளது. சிறப்பு சுற்றுலா பேருந்து கும்பகோணத்திலிருந்து புறப் பட்டு ஒரே நாளில் எண்கண் சுப்பி ரமணிய சுவாமி திருக்கோவில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன் ஆலயம், பொரவச்சேரி கந்தசாமி திருக் கோவில், எட்டுக்குடி சுப்பிர மணியசுவாமி திருக்கோவில் (நாகப்பட்டினம் மாவட்டம்), ஏர கரம் ஆதி சுவாமிநாதசுவாமி திருக்கோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோ யில் ஆகிய ஆறு கோவில்களை யும் தரிசனம் செய்வதற்கு ஏது வாக ஆறு முருகன் திருத்தலச் சுற்றுலா பேருந்து இயக்கப்பட வுள்ளது. அறநிலையத் துறை அலுவ லர்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏது வாக குடிநீர் வசதி, கழிவறை வசதி, முக்கிய பண்டிகை மற்றும் விழா நாட்களில் முன்னு ரிமை அளித்து தரிசனம் செய்து திரும்பும் வகையில் தேவை யான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்ய வலியுறுத்தப் பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பேருந்தை சிறந்த முறையில் பராமரித்து குறித்த நேரத்தில் இயக்கி, காலதாமதம் இல்லாமல் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத் தித் தர வேண்டும். அறநிலை யத்துறை அலுவலர்களுடன், போக்குவரத்துத் துறை அலுவ லர்கள் ஒன்றிணைந்து தேவைப் படும் வசதிகளை வழங்க வேண்டும். அதேபோல் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் பெயர், அலைபேசி எண்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான விபரங்கள் குறுஞ் செய்தி மூலமாக தெரிவிக்க போக்குவரத்துத் துறை அலுவ லர்கள் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் கும்பகோ ணம் மண்டலம் சார்பில் இயக் கப்படும் இந்த சுற்றுலா பேருந்து இயக்க தேதி விரை வில் அறிவிக்கப்படும். அறிவிப்பிற்கு பின், முரு கன் கோவில்களுக்கு சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் உள்ள பயணிகள், சிரமமின்றி பயணிக்க “மொபைல் ஆப் www.tnstc.in (Mobile App) Android/I phone கை பேசி” மூலமாக முன்பதிவு செய்து தங்களது பயணச் சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முருகன் கோவில் களுக்கான சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை, பயணி கள் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும். நேரடியாக பேருந்தில் பயணச் சீட்டு பெற்றுக் கொள்ள இயலாது. இவ்வாறு நிர்வாக இயக்குநர் பேசினார். முதன்மை தணிக்கை அலு வலர் சிவக்குமார், பொது மேலாளர்கள் ராஜா (நாகப்பட்டி னம்), ஸ்ரீதர் (கும்பகோணம்), துணை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள், அறநிலை யத்துறையினர் பங்கேற்றனர்.