districts

img

உழைக்கும் பெண்களின் சிறப்பு கருத்தரங்கம்

திருவாரூர், மார்ச் 10 - உலக மகளிர் தினத்தை யொட்டி சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு  சார்பாக சிறப்பு கருத்தரங்கம் திருவாரூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில இணை கன்வீனர் ரா. மாலதி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.பிரேமா, ஐசிடிஎஸ் சங்க மாநிலச் செய லாளர் வி.தவமணி, கூட்டுறவு பண்டகசாலை  எம்.சாந்தகுமாரி ஆகியோர் கருத்துரை ஆற்றினர். சிஐடியு மாநில துணைச் செயலாளர் எஸ். தேவமணி நிறைவுரையாற்றினார். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளி பெண் அபிராமி, தனது  குடும்பத்தை பாதுகாக்க ஆட்டோ ஓட்டி வரு கிறார். ஆட்டோ ஓட்டுநரான அபிராமியின் தன்னம்பிக்கையை பாராட்டி, மகளிர் தின கருத்தரங்கில் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பொது விநியோக திட்டத்தை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரைகளை கட்டாயமாக செயல் படுத்த வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்பை அதிக அளவில் உருவாக்கிட வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, மக்களை தேடி மருத்துவம், ஆஷா பணியா ளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் சம  வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் சிஐடியுவைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் சங்கம், தையல் கலை  தொழிலாளர்கள் சங்கம், முறைசாரா தொழி லாளர் சங்கம், கூட்டுறவு பண்டகசாலை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.