திருச்சி, மார்ச் 18 - அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் “அனைவருக்கும் பென்சன்” சிறப்பு மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இம் மாநாட்டில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரை ஆற்றி னார்.
அவரது உரையின் சாராம்சம் வருமாறு:
அரசின் சமூகக்கடமை
குழந்தைத் தன்மையுடன் குழந்தை களை பாதுகாப்பதும், முதியவர்களின் முதுமை காலத்தில் கனிவுடன் பாது காப்பதுமே சமூக உணர்வுடன் அரசு செய்ய வேண்டிய அடிப்படையான கடமை. இதைத்தான் சோசலிச கொள் கைகளை பின்பற்றும் நாடுகள் நடைமுறைப்படுத்திக் காண்பிக்கின் றன. முதலாளித்துவ நாடுகள், கார்ப்ப ரேட் ஆதரவு பாதையில் பயணிப்ப தால், சமூகப் பாதுகாப்பை அரசின் கடமையாக பின்பற்றாமல் தட்டிக் கழிக்கிறது என்பதை நம்மால் கண் கூடாக இந்தியாவிலும் காணமுடிகிறது.
இந்தியாவில் இன்றைய இளை ஞர்களின் வேலைவாய்ப்பே கேள்விக் குறியாக உள்ள சூழலில் முதுமையான பெற்றோர்களை பாதுகாக்கும் பொறுப் பும் கூடுதல் சுமையாகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் முறைசாரா தொழி லாளர்களின் குழந்தைகள் மிகவும் ஏழ்மையான பொருளாதார பின்னணி யில் காலை உணவு அருந்துவதற்கு வசதியற்ற சூழலில் இருக்கின்றனர். இந்த சூழலில் தமிழக அரசு செயல் படுத்தும் மாணவர்களுக்கு “காலை உணவுத் திட்டம்” மிகச்சிறந்த திட்டமாகும்.
கம்பனின் ராமராஜ்ஜியம்
ராமராஜ்ஜிய கனவுலகில் “கொடுப் பார் இல்லை, கொள்வார் இல்லாத தால்” என்று கம்பர் தனது விருப்பத்தை எழுதியிருப்பார். ஆனால் இன்றைய இந்தியாவில் 50% குழந்தைகள் மற்றும் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப் பட்டுள்ளனர், பசிக்குறியீட்டில் 126 நாடு களின் பட்டியலில் இந்தியா 111 வது இடத்தில் உள்ளது, பொருளாதாரத்தில் சிறிய நாடாக உள்ள நமது அண்டை நாடுகளான பாகிஸ்தானும், வங்கதேச மும் இந்தியாவை விட முன்னேறி உள்ளன. பசியோடு உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதைவிட, ஏன் பசி யோடு உள்ளனர் என்று சிந்திக்க வேண்டுமென்று புரட்சியாளர் சேகு வேரா நமக்கு வழிகாட்டியுள்ளார். அர சால் அனைவருக்குமான சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதல்ல, எது அரசை தடுக்கிறது என்ப தை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
வழியுண்டு, மனம் உண்டா?
சமூகபாதுகாப்பு அனைவருக்கும் சாத்தியமா என்று கேட்பவர்கள் உண்டு. குறுகிய சமூகப்பார்வையோடு அரசு பய ணித்தால் அனைவருக்குமான சமூக பாதுகாப்பு கிடைக்காது. இதை அம லாக்குவதற்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்று திட்டமிட வேண்டும்.
கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கும் கார்ப்பரேட் வரி குறைப்பை தவிர்ப்பது, வாராக்கடன்கள் தள்ளுபடி செய்வதை நிறுத்துவது, பெருமுதலாளிகளின் சொத்துவரியை உயர்த்துவது போன்ற தீர்க்கமான நடைமுறைகளை அரசு செயல்படுத்த தயாராக வேண்டும்.
பென்சனுக்கு நீண்ட நெடிய வர லாறு உண்டு. இந்தியாவில் ஆங்கிலக் காலனி ஆட்சிக்காலத்தில் காலாட் படையில் வேலை செய்தவர்களுக்கு அரசு பென்சன் வழங்கத் தொடங்கி யது. பின்னர் இந்த பயன் விரிவடைந் தது. இந்த வரலாற்று சக்கரம் 2003-ல் மாற்றமடைந்து புதிய பென்சன் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பணிக் காலத்தில் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய “கொடுபடா ஊதியமே” ஓய்வுக் காலத்தில் பென்சனாக ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படுகிறது என்று “கூலியின் கருத்தாக்கம் “ நூலில் காரல் மார்க்ஸ் வரையறுத்து உள்ளார்.
இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு முக்கிய மான காரணமாக இருப்பது தொழிலா ளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு உரிமைகள் நிராகரிக்கப்படுவதே ஆகும்.
உலகில் வளர்ந்துவரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா பரிணமிக்கிறது என்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதன் உள்நாட்டு உற்பத்தி யில் 50% பங்களிப்பை மூட்டை தூக்கும், கைவண்டி இழுக்கும், கட்டு மான தொழில் போன்ற தொழில்களில் ஈடுபடும் முறைசாரா தொழிலாளர்கள் தான் செய்கிறார்கள் என்ற விவரத்தை அரசு மறைக்கிறது. அத்தகைய தொழி லாளர்களுக்கு அரசு வழங்கும் சமுக பாதுகாப்பு மிகவும் சொற்பமானது. உதாரணமாக 60 வயதுக்கு மேம்பட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 மட்டுமே நலவாரியங்கள் மூல மாக வழங்குகிறது.
அனைவருக்கும் பென்சன்
சுமார் 2 கோடி மக்களை உள்ள டக்கிய மத்திய, மாநில அரசு ஊழியர்க ளின் கோரிக்கையாக மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி, அனைவ ருக்கும் வேலை, அனைவருக்கும் பென்சன் என்று ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான கோரிக்கை முழக்கமாக, 143 கோடி இந்திய மக்களின் சமூகக் கடமையை நிறைவேற்றும் கனவை அடைவதற்கான போராட்டத்தில், அனைத்து தடைகளையும் மீறி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கிற்கு டி.செந்தில்குமார், (பொதுச் செயலாளர், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு) தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கப் பொதுச் செயலா ளர் ஆ.செல்வம், அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலை வர்கள் எம்.கிரிஜா, சி. முத்துக்குமார சாமி, சேதுராமன் மற்றும் சகோதர சங்கத் தலைவர்கள் எஸ்.பால சுப்ரமணியம் (பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்) அஸ்லாம் பாட்சா (பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்), ஹேமந்த் குமார் ( இந்திய வங்கி ஊழி யர் சம்மேளனம்) ஆகியோரும் உரை யாற்றினார்கள்.