districts

img

ஆச்சனூர் அரசு பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா

தஞ்சாவூர், ஏப்.13-  திருவையாறு அருகே உள்ள ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்  பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வைத்தியநாதன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சி.சம்பந்தம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ப. தேன்மொழி வரவேற்றார். முன்னதாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிறுதானிய பயிர்களை கொண்டு முளைப்பாரியை சீராக மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சிறுதானியங்களை கொண்டு தோட்டம் அமைத்தலும், பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது வீடுகளில் தயார் செய்து எடுத்து வந்து 100க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். கண்காட்சியை தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஒருங்கி ணைந்த கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ்குமார் பார்வையிட்டு, மாண வர்களுக்கு சிறுதானியங்களின் பயன்பாடு, நன்மைகள் குறித்து எடுத்து ரைத்தார். தொடர்ந்து, சிறுதானிய உணவு வகைகளை தயார் செய்த மாண வர்களின் பெற்றோர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. மேலும் மதிய உண வாக சிறுதானியங்களில் தயார் செய்யப்பட்ட உணவுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.