ஏழை மக்களுக்கு கொலை மிரட்டல் விடும் கந்துவட்டிக் கும்பல்
நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மாதர் சங்கம் புகார்
புதுக்கோட்டை, செப்.16 - புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தோப்பு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துவரும் கந்துவட்டிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது. சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி, செயலாளர் பி.சுசிலா, திருவரங் குளம் ஒன்றியத் தலைவர் வி.கலைச் செல்வி, செயலாளர் பி.சோபனா உள்ளிட் டோர் அளித்துள்ள மனுவில் தெரி வித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலத்தோப்பு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைத்துக் குடும் பத்தினரும் ஏழை விவசாயத் தொழி லாளர்களாக உள்ளனர். அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் இவர்கள் வீட்டில் அடுப்பு எரியும். இந்நிலையில், இங்குள்ள குடும்பங் களிடம் புதுக்கோட்டை மற்றும் இச்சடி யில் செயல்பட்டு வரும் பல்வேறு நுண்நிதி நிறுவனங்கள் அநியாய வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர். மாத மற்றும் வாரத் தவணைகளில் கடனைத் திரும்பச் செலுத்தி வந்துள்ளனர். தவணை கட்டத் தவறியவர்களிடம் வேறு ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து கூடுதலாக, அவர்களாகவே கடனை பெற்றுக் கொடுத்து இவர்களுக்கான தொகையை வரவு வைத்துள்ளனர். இதனால் கடன் சுமை தொடர்ந்து அதி கரித்து வந்துள்ளது. ஏழை விவசாயத் தொழிலாளர்கள் உழைத்து ஈட்டும் சிறிய தொகையால், வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடனைச் செலுத்த முடி யாதவர்களை மிகவும் அநாகரிகமான முறையில் திட்டுவது, வீட்டின் கதவை உடைத்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் செல்வது, பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, கொலை மிரட்டல் விடுவது உள்ளிட்ட கீழ்த்தரமான செயல்களில் மேற்படி கந்துவட்டிக் கும்பல் ஈடுபட்டு வருவ தாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக் கின்றனர். இதனால், அவமானம் தாங்க முடியாமல் சிலர் தற்கொலைக்கும் முயற்சித்துள்ளனர். எனவே அராஜகமான முறையில் நடந்து கொள்ளும் நுண்நிதி நிறுவ னங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மேலத் தோப்பு கிராம மக்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத் தினர் சார்பில் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில், நுண்நிதி நிறு வனம் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களுக்கு பாதுகாப்புக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில்
ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
சுங்கத்துறை ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது
சுங்கத்துறை ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது திருச்சிராப்பள்ளி, செப்.16 - திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதில், சுங்கத்துறை ஓட்டு நர் உட்பட 3 பேர் கைது செய்யப் பட்டனர். திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருகின்றன. இந்த விமானங்களை இண்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவ னங்கள் இயக்குகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங் களில், வெளிநாடுகளில் இருந்து அதி களவில் தங்கம் கடத்தப்பட்டு வரு கிறது. அதனை சுங்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற் கொள்வது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று திருச்சி வந்தது. விமா னத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்த போது, விமான நிலைய சுங்கத்துறை ஓட்டுநர் குமார் வேகமாக வெளியேறினார். இதைப் பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை அழைத்து அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு கிலோ தங்கத்தை வெளியே எடுத்துச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து இவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த அறந்தாங் கியைச் சேர்ந்த நடராஜன் (43) என்ற பயணி கொண்டு வந்த ஒரு கிலோ தங்கத்தை வெளியே கொண்டு வரு வதற்கு உதவி செய்ததாக தெரிய வரு கிறது. இந்தத் தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியே பார்கிங் பகுதி யில் காத்திருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த டேனியல் மைக்கேல் என்பவ ரிடம் கொடுப்பதற்கு முயன்றதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்கத்தை பெற காத்திருந்த டேனியல் மைக்கே லையும் சுங்கத்துறையினர் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிநாடுகளில் இருந்து பலமுறை தங்கத்தை கொண்டு வந்து, ஓட்டுநரின் உதவியுடன் வெளியே கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கடத்தலில் தொடர்புடைய மூவரையும் கைது செய்ய சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சுங்கத்துறை ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.56 லட்சம் என அதி காரிகள் தெரிவித்தனர்.
திருச்சியில் 3 பேருக்கு டெங்கு
திருச்சிராப்பள்ளி, செப்.16 - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரு கிறது. இதைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுத்துள்ளது. இதற் காக அரசு மருத்துவமனை களில் டெங்கு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நி லையில் திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக் கப்பட்டு வரும் நிலையில், மூவ ரும் நலமுடன் இருப்பதாக சுகா தாரத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
தீத்தடுப்பு செயல் விளக்கம்
தஞ்சாவூர், செப்.16- முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சா வூர் மாவட்டம் பேராவூரணி அருகே, செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில், பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தீத்தடுப்பு செயல் விளக்கம் செய்து காட்டப்பட் டது. நிலைய அலுவலர் சீனி வாசன் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதனை எதிர்கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்த னர். இதில், மருத்துவ அலுவ லர்கள், செவிலியர்கள், மருத்து வப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
கும்பகோணம், செப்.16 - தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் நாள் சமூக நீதி நாளாக கடைப்பிடிக் கப்படு கிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அரசினர் கலைக் கல்லூரி யில் முதல்வர் அ.மாதவி தலை மையில், அனைத்து துறை களின் தலைவர்கள், பேராசிரி யர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை, செப்.16 - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலாடு துறை மாவட்டம், செம்பனார் கோவில் கலைமகள் கலை, அறிவியல் கல்லூரியில் மாபெ ரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநா தன் தொடங்கி வைத்து தேர்ந் தெடுக்கப்பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி னார். முகாமில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
செப்.22 மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், செப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தாலுகா) மாற்றுத்திற னாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், செப்டம்பர் 22 அன்று காலை 11 மணிக்கும், அதே தினம் பிற்பகல் 4 மணியளவில் விவ சாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டமும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி தலைமையில் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட அந்தந்த நேரங்களில் மாற்றுத்திறனாளிகளும், விவசா யிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை தெரி வித்து பயன்பெறலாம் என வருவாய் கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 22.9.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, விவசாயி கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரி வித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளியில் அபாகஸ் பயிற்சி தொடக்கம்
தஞ்சாவூர், செப்.16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அபாகஸ் பயிற்சி தொடக்க விழா நடை பெற்றது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையா ளர் பால்ராஜ் முயற்சியால், தஞ்சாவூர் மாவட்டத்தில் விருப்பமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அபாகஸ் பயிற்சி வழங்கப்பட்டது. சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குளோபல் அகாடமி ஆப் எக்சலென்ஸ் என்ற தன்னார்வ சேவை நிறுவனம் வழி யாக, அதன் நிறுவனர் தேசியக் கல்வியாளர் பிரஷிதா, அமெரிக்கா விலிருந்து செவ்வாய்க்கிழமை தோறும் இணைய வழியாக பயிற்சி வழங்கினார். பயிற்சிக்கு பின் ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் காஜாமுகைதீன் பயிற்சியை நிறைவு செய்தார். கற்பித்தலில் புதிய புதிய முறைகளை கையாண்டு, மாணவர் களின் திறனை மேம்படுத்தி வரும் இவர், தனது பள்ளி மாணவர்களுக்கு அபாகஸ் பயிற்சி வழங்கிட முடிவு செய்த நிலையில், அதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பேராவூரணி வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி தலைமை வகித்தார். மாணவர்கள் கற்றுக் கொள்ள அபாகஸ் மணிச் சட்டங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீ.கௌதமன் தனது சொந்தச் செலவில் வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.
உலக ஓசோன் தின சிறப்பு கருத்தரங்கம்
தஞ்சாவூர், செப்.16- தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி யில், உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் கல்விக் கழகம், அறிவியல் கழகம், நாட்டு நலப் பணி திட்டம் ஆகியவை இணைந்து உலக ஓசோன் தினத்தை கொண்டாடின. கல்லூரி முதல்வர் அ.ஜான்பீட்டர் தலைமை வகித்தார். கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், மாவட்டக் கருவூல அலுவலர் கணேஷ்குமார், அறிவியல் கழக ஒருங்கிணைப் பாளர் வெ.சுகுமாரன், துளிர் ஆசிரியர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அறி வியல் இயக்க மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நாதன், மாவட்ட செயலா ளர் முருகன், சுற்றுச் சூழல் கல்வி கழக ஒருங்கிணைப்பாளர் பேரா.நிர்மலா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைத்து நடத்திய போட்டிகளில் பங்கேற்று வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர், செப்.16 - திருவாரூர் மருத்துவக் கல்லூரி சுற்று வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் ஆய்வு மேற்கொண்டார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து என்ற பயிற்சி மாணவி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் வியாழக்கிழமை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதீத காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த பரிசோதனை முடிவில் டைபாய்டு காய்ச்சல் என தெரியவந்தது. எனினும் வேறு வகையான காய்ச்சலாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் அவரது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவு வரும் முன்பே சிந்து வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு வைரஸ் காய்ச்சலுக்காக தனி வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் அருகில் நீர் தேங்கி இருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ சுற்றுவட்டாரப் பகுதிகளையும் மருத்துவக் கல்லூரியையும் ஆய்வு செய்து, மருத்து வமனை அருகில் உள்ள இடங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.
மத்திய பல்கலை.யில் செப்.20 இல் திறன் பயிற்சி வகுப்புகள் துவக்கம்
திருவாரூர், செப்.16 - இந்திய அரசாங்கத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிஎம்கேவிஒய் 4.0 திட்டத்தின் மூலம் தமிழ் நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் திறன் அடிப்ப டையிலான பயிற்சி வகுப்பு கள் நடைபெற உள்ளன. 15-45 வயதுடைய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இதில் பங்கேற்கலாம். திறன் மைய முன் முயற்சி-2023 ஆண்டின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தில், மண்ணில்லா வேளாண்மை வல்லுநர், காளான் வளர்ப்பவர் (தொ ழில் முனைவோர்) மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய மூன்று பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படு கின்றன. பயிற்சிக்கான தற்காலிக தொடக்கம் செப்.20 ஆகும். ஆர்வமுள்ள விண்ணப்ப தாரர்கள் https://forms.gle/RaSNjuadfwDwas8U9 என்ற இணைப்பு மூலம் கூகுள்(Google) படிவங் களை பூர்த்தி செய்து பதி யலாம். இப்படிப்புகள் இலவசமாக வழங்கப்படு கின்றன. பயிற்சி கால அளவு 220 முதல் 270 மணி நேரம். கூடுதலாக வேலை பயிற்சியும் இருக்கும். பயிற்சியின் முடிவில், அமைச்சகத்தால் சான்றி தழ்கள் வழங்கப்படும். எந்தவொரு தொழில் முனைவோர் தொடக்கம் தொடர்பான பணிகளுக்கும், திறன்சார்ந்த இந்தியா இணையதளத்தில் அவ்வப் போது விளம்பரப் படுத்தப்படும் திறன்சார்ந்த வேலைகளுக்கு விண்ணப் பிக்கவும் இந்த சான்றி தழ்கள் நாடு முழுவதும் செல்லத்தக்கது என தெரி விக்கப்பட்டுள்ளது.