திருச்சிராப்பள்ளி, ஜூன் 6-
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங் கம் கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் சர் சி.வி.ராமன் ஸ்டெம்பூங்கா பிரச்சனை களை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் செவ்வயான்று ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
சர் சி.வி.ராமன் ஸ்டெம் பூங்கா வாசலில் உள்ள நுண் உரம் செயலாக்க மைய குப்பை மண்டியால் குழந்தை களுக்கு தொற்று நோய் பரவு அபாயம் உள்ளது. எனவே உரக்கிடங்கை அப்புறப் படுத்த வேண்டும், பூங்கா செயல்படும் நேரத்தை இரவு 8.30 மணிவரை நீட்டிக்க வேண்டும், பூங்கா நுழைவு கட்டணத்தைக் குறைக்க வேண்டும். கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண் டும். குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் ஜெ.ஜெ.நகர் கிளை சார்பில் செவ்வா யன்று ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாந கர் செயலாளர் ராஜா, ஸ்ரீ ரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் வட்டாட்சி யர் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது, “குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா பொருத்த உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும். உரக்கிடக்கிடங்கை இட மாற்றம் செய்வது, நுழைவுக் கட்டணத்தை குறைப்பது குறித்து மாநகராட்சி ஆணை யருக்கு பரிந்துரை செய்யப் படும் என உறுதியளித்தார்.