districts

img

சங்கரன்பந்தல் புதிய மின்மாற்றிகள் தொடக்க விழா

மயிலாடுதுறை, நவ.22 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் உத்திரங்குடி, இலுப்பூர், விளாகம், ஈச்சங்குடி ஆகிய நான்கு ஊராட்சியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் நான்கு புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் மாலிக், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பைலட், புஷ்பமேரி உதயகுமார், மின் வாரிய செயற்பொறியாளர் (பொ) ரேணுகா, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.