districts

img

தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்ற பெண் கூட்டுறவுத் துறை தணிக்கையாளராக தேர்வு

தஞ்சாவூர், ஜூலை 29 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், புனல் வாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி தரும் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு, 12 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து, கிராமப் புற மாணவர்களை அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, செப்.12 இல், புனல் வாசல் கிராமத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் தொடங்கப்பட்டது.  பள்ளி வளாகத்திலேயே போட்டித்  தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர் களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய  இடம் பள்ளி நிர்வாகம் சார்பில் மனமுவந்து அளிக்கப்பட்டது.  கடந்த 1993 ஆம் ஆண்டு இப்பள்ளியில் படித்து தற்போது பல்வேறு நாடுகளிலும், வெவ்வேறு துறைகளிலும் பயின்று வரும்  முன்னாள் மாணவர்கள் தன்னார்வ பயி லும் வட்டத்தின் தேவைகளுக்கு பொறுப் பேற்றுக் கொண்டு இன்முகத்துடன் உதவி செய்து வருகின்றனர்.  இங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் மூலம் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச மாக பாடநூல்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இங்கு பயிலும் மூன்று பேர் குரூப்-2 தேர்வில் முதல்நிலை தேர்வு  எழுதி வெற்றி பெற்று முதன்மை தேர்வு எழுதி னர். அதில், பட்டுக்கோட்டை அருகே உள்ள  கழுகுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவரின் மனைவி நிர்மலா மேரி ஆஸ்மி (33), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடந்த கலந் தாய்வில் பங்கேற்று, கூட்டுறவு தணிக்கை துறையில் ஜூனியர் ஆபரேட்டிங் ஆடிட்ட ராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  நிர்மலா மேரி ஆஸ்மியின் கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதுகுறித்து குரூப் 2 தெருவில் வெற்றி  பெற்ற நிர்மலா மேரி ஆஸ்மி கூறுகை யில், “கிராமப் புறங்களில் வாழும் ஏழை,  எளிய மாணவர்கள் அரசுப் பணிக்கு வர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் புனல்வாசலில் தன்னார்வ பயிலும் வட்டம் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டல் கருத்துகள் இலவச மாக வழங்கப்பட்டன. இதில் படித்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இதன் வாயி லாக பலர் படித்து எதிர்காலத்தில் அரசு பணி களில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். என்னுடைய வெற்றிக்கு காரண மான தன்னார்வ பயிலும் வட்ட அமைப்பின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.