திருச்சிராப்பள்ளி, ஜூன் 5 - திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூ ரில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் திரு வெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 167 பயனாளிகளுக்கு பட்டா, 40 மாற்றுத்திறனாளி களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உதவி உபகரணங்கள், 50 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என மொத்தம் 277 பயனாளிகளுக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “ஜூன் 13 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதி முறைகளை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோ சனை செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப டையில் முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கலாமே என கூறுகிறார்” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவ ராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார், வட்டாட்சியர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.