தஞ்சாவூர், ஏப்.25- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப் பர் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்ற ஏழூர் வலம் வரும் விழாவையொட்டி பல்லக்குகள் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 14 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொ டர்ந்து நாள்தோறும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், முக்கிய வைபவமான சப்தஸ்தானம் என்ற ஏழூர் வலம் வரும் விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் இரு பல்லக்குகள் திருப்பழனத்துக்குச் சென்றன. அங்கிருந்து 3 பல்லக்குகள் சேர்ந்து புறப்பட்டு, திருச்சோற்றுத்துறையைச் சென்ற டைந்தன. திருச்சோற்றுத்துறையில் இருந்து 4 பல்லக்குகளும் புறப்பட்டு திருவேதிக்குடிக்கு சென்றன. திருவேதிக்குடியிலிருந்து 5 பல்லக் குகளும் சேர்ந்து திருக்கண்டியூருக்கும், அங்கி ருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்து ருத்திக்கும், திருப்பூந்துருத்தியிலிருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு, திருநெய்த்தானம் என்ற தில்லைஸ்தானம் காவிரியாற்றையும் சென்ற டையும். இதன் பின்னர் இரவில் காவிரி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறும். இதையடுத்து, தில்லைஸ்தான பல்லக்கு உள்பட 7 ஊர் பல்லக்குகளும் வெள்ளிக்கிழமை மாலை திரு வையாறு தேரடி திடலை சென்றடையும். அங்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக் குகள் ஒவ்வொன்றாகச் சொந்த ஊருக்குத் திரும்பும்.