கோவில்பட்டி, ஆக.13-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சாகித் திய அகாதெமியின் பால புரஸ்கார் விருது பெற்ற படைப்பாளுமை கா.உதய சங்கருக்கு பாராட்டுவிழா கோவில்பட்டியில் நடை பெற்றது.
நிகழ்விற்கு தமுஎகச தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பே.சங்கர லிங்கம் தலைமை வகித்தார். கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜூ, தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர். ச.தமிழ்செல் வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலச் செயற்குழு உறுப்பி னர் சத்தியபாலன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.
தோழர் கா. உதயசங்க ரின் சிறுகதைகள் படைப்புக ளைப் பாராட்டி மாநிலச் செயற்குழு உறுப்பினர் மணி மாறன், கவிதை படைப்புக ளை சீர்தூக்கி மாநிலக்குழு உறுப்பினர் மாதவராஜ், கட்டுரைகள் குறித்து மாநி லச் செயற்குழு உறுப்பினர் நாறும்பூநாதன், சிறார் இலக்கியங்கள் குறித்து ஈரோடு மாவட்ட இணைச் செயலாளர் சரிதா ஜோ, மொழிப் பெயர்ப்புகள் குறித்து எழுத்தாளர் கமலா லயன், நாங்கள் சேக்காளி கள் என்ற தலைப்பில் கோவில்பட்டி எழுத்தாளர் சாரதி ஆகியோர் உரை யாற்றினர். கா. உதயசங்கர் ஏற்புரை வழங்கினார். கோவில்பட்டி திடவை பொண்ணுச்சாமி நன்றி கூறினார். நிகழ்வை லட்சுமி காந்தன் ஒருங்கிணைத்தார்.
தொடர்ந்து மாலை நடை பெற்ற கலை இரவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க கோவில்பட்டி தலை வர் அபிராமி முருகன் தலை மை வகித்தார். செயலாளர் வேலுச்சாமி வரவேற்றுப் பேசினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் கலை இரவை துவக்கி வைத்தார். கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார்.
அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்செல்வன் சாகித்திய அகாதெமி விருதாளர் கா. உதயசங்கரைப் பாராட்டி அவர் எழுதிய 150- ஆவது நூலையும் வெளியிட்டார். அமைப்பின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ராமசுப்பு நன்றி கூறினார்.
முன்னதாக கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடை யான் தண்டபாணி, முத்துச் சிப்பி தாமோதரன் ஆகி யோரின் இசை நிகழ்ச்சி, முனைவர் சகா. மா.சங்கரின் சகா கலைக்குழுவினரின் ஒயிலாட்டம், மாடாட்டம், பொய்கால் குதிரை நிகழ்வு கள் நடைபெற்றன.