திருச்சிராப்பள்ளி, நவ.10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதிக் குழு 9 ஆவது மாநாடு ஞாயிறன்று செந்தண்ணீர்புரத்தில் எஸ்.ஆர்.ஜெ திருமண மண்ட பத்தில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள் கனல்கண்ணன், விஸ்வநா தன், ஷாஜகான் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் முரளி ஏற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர் துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோவி. வெற்றிச்செல்வன், மாவட் டக் குழு உறுப்பினர்கள் சிவக்குமார், சீனிவாசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். மணல்வாரித்துறை சாலையில் அமைந்துள்ள சுடுகாட்டை சீரமைத்து நவீனமயமாக்க வேண்டும். அரியமங்கலம் 35 ஆவது வார்டிற்குட்பட்ட தெற்கு உக்கடை செல்லும் சுரங்கப் பாதை மற்றும் சர்வீஸ் சாலையை தேசிய நெடுஞ் சாலைத் துறை உடனே சீர மைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. பாலக்கரை பகுதிச் செய லாளராக எஸ்.சுரேஷ் உள்பட 9 பேர் கொண்ட பகுதிக் குழு தேர்வு செய்யப்பட் டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கார்த்திகே யன் நிறைவுரையாற்றினார். முன்னதாக பகுதிக் குழு உறுப்பினர் மோகன்ராஜ் வரவேற்றார். பகுதிக் குழு உறுப்பினர் ராகிலா பானு நன்றி கூறினார்.