சிபிஎம் தஞ்சை ஒன்றியச் செயலாளராக எஸ்.கோவிந்தராசு தேர்வு
தஞ்சாவூர், அக்.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை ஒன்றிய 24 ஆவது மாநாடு தஞ்சா வூர் மாஸ் திருமண மண்ட பத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. ஒன்றியக் குழு உறுப்பி னர் பி.சங்கிலி முத்து மாநாட்டுக் கொடியேற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.கோவிந்த ராசு வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. பக்கிரிசாமி துவக்க உரை யாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.செந் தில்குமார் நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக எஸ். கோவிந்தராசு தேர்வு செய்யப்பட்டார். கள்ளப் பெரம்பூர் ஏரியை முழுமையாக தூர்வாரி சுற்றுலாத் தலமாகவும், பற வைகள் சரணாலயமாகவும் அமைத்திட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் புதிய வேளாண் தொழிற் சாலை அமைக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும். விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிபிஎம் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளராக வி.ரவி தேர்வு
தஞ்சாவூர், அக்.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை 14 ஆவது ஒன்றிய மாநாடு, அம்மாபேட்டை சுடர் மஹா லில் புதன்கிழமை நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட் டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.வி. கண்ணன் நிறைவுரை யாற்றினார். 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக வி.ரவி தேர்வு செய்யப்பட்டார். அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசரச் சிகிச்சைக்கு இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும். அம்மாபேட்டை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை புதி தாக கட்டித் தர வேண்டும். அரசுப் பள்ளிகளில் கழிப் பறை வசதியை மேம்படுத்த வேண்டும். மாட்டு வண்டிக் கென தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும். சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தர வேண்டும். நெல் கொள்முதல் நிலை யங்களில் கையூட்டு பெறு வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளராக கே.அன்பழகன் தேர்வு
திருவாரூர், அக்.16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு எரவாஞ்சேரி பி. எஸ்.சுமங்கலி மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் வீ.ராஜதுரை ஏற்றினார். பி.செல்வராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி துவக்க உரையாற்றினார். மாநாட்டில் 9 பேர் கொண்ட ஒன்றிய குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப் பட்டு, புதிய ஒன்றியச் செய லாளராக கே.அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி நிறைவுரையாற்றினார். மருதவஞ்சேரியில் பொது மக்கள் குடியிருப்பு பகுதி யில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை இடம் மாற்றிட வேண்டும். மோச மடைந்துள்ள மானத்தங் குடி- நன்னிலம் தார்ச்சா லையை உடனடியாக சீர்செய்ய வேண்டும். எர வாஞ்சேரி கடைவீதியில் உள்ள பொதுக் கழி வறையை இடித்துவிட்டு புதி தாக நவீன கழிவறை கட்ட வேண்டும். பொதுமக்கள் மற்றும் மகளிர் பயன்படும் வகையில் மயிலாடுதுறை - கும்பகோணம் நகரப் பேருந்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.