மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் சார்பில் செம்மயில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 2 ஆம் ஆண்டு கூட்டத்தில் 94 ஊராட்சிகளைச் சேர்ந்த 4300 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகித்தார்.